1. Home
  2. தமிழ்நாடு

குக்கரில் மாட்டிக் கொண்ட குழந்தையின் தலை !! குக்கரை வெட்டி , குழந்தைக்கு சிகிச்சை...

குக்கரில் மாட்டிக் கொண்ட குழந்தையின் தலை !! குக்கரை வெட்டி , குழந்தைக்கு சிகிச்சை...


குழந்தைகளின் விளையாட்டுத் தனம் இருக்கத்தான் செய்யும். ஆனால் சில குழந்தைகள் அந்ய்யும் சேட்டைகள் , அந்த குழந்தைக்கே தலைவலியாகவும் மாறும் என்பது அதுக்கு தெரியாது. எனவே பெற்றோர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.

குக்கரில் மாட்டிக் கொண்ட குழந்தையின் தலை !! குக்கரை வெட்டி , குழந்தைக்கு சிகிச்சை...

எந்தவொரு வேலை செய்து கொண்டிருந்தாலும் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருப்பது அவசியம். இந்நிலையில் குஜராத் மாநிலம் பவா நகரில் பிரியன்ஷி வாலா என்ற ஒரு வயது பெண் குழந்தை குக்கரை வைத்து நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத வகையில் குக்கரில் தலை சிக்கிக் கொண்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குக்கரை எடுக்க முயற்சித்தனர். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாரும் ஓடி வந்தனர். பலரும் மாறி, மாறி முயற்சித்ததில் குழந்தையின் தலையில் காயங்கள் ஏற்பட்டன.

மேலும் தலை வீக்கமடையத் தொடங்கியது. இதனை உணர்ந்த பெற்றோர் உடனே அருகிலுள்ள சர் டி மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைகள் நிபுணர் முதல் எலும்பு சிகிச்சை நிபுணர் வரை பல்வேறு துறை மருத்துவர்கள் குக்கரை எடுக்க முயற்சித்தனர்.

ஆனால் அனைவரது முயற்சியும் வீணானது. இதுபற்றி சர் டி மருத்துவமனை நிர்வாகி ஹர்திக் கதானி கூறுகையில், நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதையடுத்து பாத்திரங்கள் பழுது பார்ப்பவரை அழைத்து வந்தோம்.

அவர் குக்கரை வெட்டி எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றினார். முன்னதாக வீட்டில் குழந்தையின் தலையை எடுக்க முயன்று காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே குழந்தையை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம். மூளைக்கு செல்லும் ரத்தம், தலைப் பகுதியில் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்று கவனித்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like