1. Home
  2. தமிழ்நாடு

ராணுவ வீரரின் வீட்டில் நடந்த கொடூரம்.. தாய், மனைவி கொலை.. அலறிய குழந்தை !

ராணுவ வீரரின் வீட்டில் நடந்த கொடூரம்.. தாய், மனைவி கொலை.. அலறிய குழந்தை !


சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே முடுக்கூரணி கிராமத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சந்தியாகு தனது மனைவி ராஜகுமாரி, மருமகள் சினேகா, அவரது 8 மாத பெண் குழந்தை ஆகியோருடன் வசித்து வருகிறார். அவரது மகன் ஸ்டீபன்  ராணுவத்தில் லடாக்கில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சந்தியாகு நேற்று இரவு தோட்டத்தில் இருந்துள்ளார். வீட்டில் மாமியார், மருமகள், குழந்தையுடன் இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்தனர்.

அப்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ராஜகுமாரி, மருமகள் சினேகாவை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 80 பவுன் தங்க நகையையும், பணத்தையும் கொள்ளை அடித்துத் தப்பிச் சென்றனர்.

8 மாத பெண் குழந்தை உயிருடன் தப்பிய நிலையில், மறுநாள் காலையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு சென்ற அக்கம் பக்கத்தினர் இந்தக் கோரச் சம்பவம் நடந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
 
சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வருண்குமார் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி, கை ரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அழைத்து வந்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

ராணுவ வீரரின் குடும்பத்தில் இரட்டைக் கொலை நடந்திருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாகு ஓய்வு பெற்றவர், அவரது மகன் ஸ்டீபன் லடாக்கிலும், இன்னெரு மகன் ராஜாவும் ராணுவத்தில் பணிபுரிகின்றனர். 

இதனிடையே, நகை, பணத்திற்காக இந்த கொலை நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். 

ராணுவ வீரரின் வீட்டில் புகுந்து தாய் தற்றும் மனைவியை கொலை செய்து கொல்லை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in 

Trending News

Latest News

You May Like