சாத்தான்குளத்தில் மீண்டுமொரு கொடூரம்... ஏழு வயது சிறுமியை சீரழித்த காமுகர்கள்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 7 வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தான்குளத்தில் போலீஸ் சித்திரவதை காரணமாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அந்த சம்பவம் ஐநா வரை எதிரொலித்தது. இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு மற்றொரு கொடூரம் நிகழ்ந்துள்ளது. கல்விளை பகுதியில் 7 வயது சிறுமி கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் தண்ணீர் டிரம் ஒன்றில் சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஊர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் முத்தீஸ்வரன், நித்தீஸ்வரன் ஆகிய 2 இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in