1. Home
  2. தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செக் வச்ச அண்ணாமலை..! இதை மறுப்பாரா ஸ்டாலின்?

1

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது,முதல் விஷயம் விஸ்வகர்மா திட்டம். பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு 3 லட்ச ரூபாய் மானியம், வட்டியில்லா கடன், தொழில் தொடங்க உபகரணங்கள், பயிற்சிக்கான செலவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அதுவே தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் கீழ் 35 வயதுக்கு மேல் இருப்பவர்கள் மட்டுமே பயன்பெற முடியும்.

மேலும் மக்கள் பிரதிநிதிகளை முன்னிலைப்படுத்தி விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் கொண்டு வந்துள்ளார். ஆனால் அரசு அதிகாரிகளை முன்னிலைப்படுத்தி திமுக அரசு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது திமுகவினருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு வந்துள்ள திட்டம் தான் கலைஞர் கைவினை திட்டம். இதனை மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இரண்டாவது விஷயம் 2017-18 முதல் 2021-22க்கு உட்பட்ட தணிக்கையை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.

இதன்மூலம் தமிழகம் எந்த அளவிற்கு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. குறிப்பாக போக்குவரத்து துறை மோசமான நிலையில் உள்ளது. இதையடுத்து தமிழக கோயில்களை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும். நீதிமன்றம் கூறியும் அறநிலையத்துறை கணக்குகளை தரவில்லை. தலைமை செயலாளரை மூன்று முறை பார்த்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்று தணிக்கை துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனவே தான் அறநிலையத்துறையின் கீழ் கோயில்கள் இருக்கக் கூடாது என்று கூறுகிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்யப் போகிறோம் என்று கூறினார். மூன்றாவது விஷயம் அதானிக்கும் திமுக அரசுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது என்பதை தொடர்ந்து பேசி வருகிறோம். கடந்த ஆட்சியில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது என்று சில அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்போதைய ஆட்சியிலும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அதானியை சந்திக்கவில்லை. என் மீது எதிர்க்கட்சிகள் அபாண்டமாக குற்றம்சாட்டுவதாக தெரிவித்தார். பாஜக எந்த ஒரு இடத்திலும் அப்படி குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. அப்படி சந்திப்பது குற்றமும் இல்லை. நீங்கள் அதானிக்கு ஒப்பந்தம் அளித்துள்ளீர்கள் என்பது தான் கேள்வி. ஆனால் முதலமைச்சரின் மருமகன் சபரீசன் அவர்கள் அதானியை சந்தித்தார்.

சென்னையில் லீலா பேலஸ் ஓட்டலிலோ, அவருடைய வீட்டியோ, வேறு ஏதாவது ஒரு இடத்திலோ சந்திக்கவில்லை என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் தெரிவிப்பாரா? அப்படி கூறினால் சந்திப்பு நடந்ததற்கான ஆதாரத்தை காண்பிக்க நாங்கள் தயார் என்றார். கடந்த வாரம் கூட சந்திப்பு நடந்திருக்கிறது. உங்கள் மருமகன் சந்தித்தால் நீங்கள் சந்தித்ததாக அர்த்தமாகாதா? சபரீசன் சந்திக்கிறார். முதலமைச்சரை சுற்றியுள்ள அதிகாரிகள் சந்திக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறினார். 

Trending News

Latest News

You May Like