1. Home
  2. தமிழ்நாடு

இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை !!

இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை !!


இருட்டுக்கடை என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் நுழைவாயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஒரு அல்வா கடையாகும். இதன் தனி சுவைக்காக புகழ் பெற்றது. குறிப்பாக தென்னிந்திய சுற்றுலா பயணிகள் இங்கு அல்வா வாங்குவது வழக்கம்.

கடை ஆரம்பிக்கப்பட்ட நாளில் ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டுமே இருந்திருக்கிறது. மாலை நேரத்தில் தான் இது திறக்கப்படுவது வழக்கம் என்பதால் இருட்டாய் இருக்கும் கடை என்பதே காலப் போக்கில் மாறி 'இருட்டுக் கடை' என்றாகி விட்டது. இன்று வரை இதற்கென தனி பெயர் பலகை கூட கிடையாது.

இப்போது எண்ணெய் விளக்குக்கு பதில் சாதாரண மின்விளக்கை மட்டுமே பயன் படுத்துகிறார்கள். 1940களில் இராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் துவங்கப்பட்டு, இப்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது.

இருட்டுக் கடை அல்வா பெயரில் போலி கடைகள் நடத்தவும் , இந்தப் பெயரை வேறு யாரும் பயன்படுத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் , இன்று கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதாகவும் , இதனால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Newstm.in

Trending News

Latest News

You May Like