ஏர்டெல் , வோடாபோன் , ஜியோ நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு !!
கொரோனா பாதிப்பால் 2 ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வீட்டிற்குள் முடங்கி கிடப்பதால் , பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய , மாநில அரசுகள் பொதுமக்களுக்கு நிவாரணங்களை அறிவித்து வருகின்றன.
சில தனியார் நிறுவனங்களும் நிவாரண நிதியை அரசுக்கு அளித்து வருகின்றனர். தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவித்துள்ளது. அதில் , ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு போதிய வசதி இல்லை என்பதால் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்கள் மே 3ந்தேதி வரை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி காலத்தை நீட்டித்துள்ளன.
இதனால் ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் வேலிடிட்டி காலம் முடிந்த பின்னரும் மே 3 ம் தேதி வரை இன்காமிங் அழைப்புக்கான வசதியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்று வோடபோன் ஐடியா , ஜியோ நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை நீட்டித்து உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Newstm.in