1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக பெண் நிர்வாகியிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்த முன்னாள் எம்எல்ஏ!?

அதிமுக பெண் நிர்வாகியிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்த முன்னாள் எம்எல்ஏ!?


திருப்போரூர் முன்னாள் எம்எல்ஏ தன் கணவரிடம் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றியதாகவும், அதை தற்போது கேட்பதற்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அதிமுக ஒன்றிய இணை செயலாளர் செங்கல்பட்டு எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். 

மடையத்தூர் பகுதியை சேர்ந்த திரிபுரசுந்தரி, கடந்த 20 ஆண்டுகளாக, திருப்போரூர் ஒன்றிய அதிமுக இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது கணவர் பஞ்சாட்சரமும், திருப்போரூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரனும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்ததாக தெரிகிறது. அதில் சுமார் 2 கோடி ரூபாய் வரை தன் கணவரை ஏமாற்றிவிட்டனர் என திரிபுரசுந்தரி குற்றம் சாட்டியுள்ளார். பல முறை பணம் கேட்டு அதில் 50 லட்ச ரூபாய் திருப்பி கொடுத்ததாகவும், ஒன்றரை கோடி தர வேண்டும் எனவும் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணனிடம் புகார் அளித்துள்ளார். பணத்தை திருப்பிக் கேட்டால் முன்னாள் எம்எல்ஏ கொலை மிரட்டல் விடுப்பதாக திரிபுரசுந்தரி குற்றம் சாட்டியுள்ளார்.


 ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் எம்எல்ஏ மறுப்பு தெரிவித்துள்ளார். திரிபுரசுந்தரி கொடுத்த புகாரில் எவ்வித உண்மைத்தன்மையும் கிடையாது என அவர் கூறியுள்ளார். திரிபுரசுந்தரியின் கணவர் பஞ்சாட்சரத்திற்கு கொடுக்க வேண்டிய பணம் பெரும்பாலும் கொடுத்தாகி விட்டது என்றும், புகாரில் கூறியவாறு அவ்வளவு பணம் கொடுக்க வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இடம் இன்னும் விற்கவில்லை என்றும், விற்கும் போது மீதமுள்ள பணத்தை கொடுக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

newstm.in

Trending News

Latest News

You May Like