அதிரடி! கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் சிறப்பு குழுக்கள் அமைப்பு!!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் ஒரு மண்டலத்துக்கு ஒரு குழு என 15 சிறப்பு குழுக்களும், அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மொத்தம் நான்கு பேர் கொண்ட குழு ஒரு மண்டலத்திற்கு ஒரு குழு என அமைக்கப்பட்டுள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் வருவாய், காவல், சுகாதாரத் துறைகளின் அலுவலர்கள் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள்.
சென்னையில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் தனி கவனம் செலுத்துவதற்காக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டார்.
அதே போல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிடவும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தவும் இவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
newstm.in