ஒரு வழியாக கொரோனா மருந்தின் சோதனை வெற்றி!
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது செலுத்திய சோதனை வெற்றி பெற்றுவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த சொசோனோவ் பல்கலைக்கழகம் இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறியுள்ளது. இதன்மூலம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி அதில் வெற்றிபெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் இயக்குநர் கூறியுள்ளார். கடந்த மாதம் 18ஆம் தேதி இதற்கான சோதனை தொடங்கப்பட்டதாகவும், இவை வெற்றிபெற்றதால் முதல் குழுவினர் நாளை மறுநாளும், இரண்டாம் குழுவினர் 20ஆம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர். இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள Gamalei Institute of Epidemiology and Microbiology என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
newstm.in