1. Home
  2. தமிழ்நாடு

விளைச்சல் அதிகம்.. விலை இல்லை.. கால்நடைகளுக்கு உணவாகும் முருங்கை..!

விளைச்சல் அதிகம்.. விலை இல்லை.. கால்நடைகளுக்கு உணவாகும் முருங்கை..!


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சொட்டுநீர் பாசனம் மூலம் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு விளையும் முருங்கைக்காய்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, லண்டன் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

கோடைகாலங்களில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகமாக இருக்கும். இதனால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடம் நல்ல விலை கொடுத்து முருங்கைக்காய்களை வாங்கிச் செல்வார்கள்.

தற்போது கோடைகாலம் என்பதால் முருங்கைக்காய் விளைச்சல் அதிக அளவில் உள்ளது. ஆனால், சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக முருங்கைக்காய்கள் மரத்திலேயே நிறம் மாறியுள்ளது. இதனால், முருங்கைக்காய்களை விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை.

இதுகுறித்து முருங்கை விவசாயிகள் கூறியதாவது; ‘இந்த ஆண்டு முருங்கைக்காய் அதிக அளவில் காய்த்து இருந்தது. நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.

ஆனால், விளைச்சல் ஆன பின்பு பெய்த கோடை மழையால் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த முருங்கைக்காய்கள் விலை இல்லாமல் போய்விட்டது.

மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காயை ஒரு ரூபாய்க்கு கேட்கிறார்கள். ஒரு கிலோ சாகுபடி செய்ய உரம், மருந்து, கூலி என 5 ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இத்தனை செலவுகளையும் செய்து முருங்கைக்காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுப்பது வேதனையாக உள்ளது.

எனவே, விலை குறைந்த காலத்தில் முருங்கைக்காய்களை சேமித்து வைப்பதற்கு வசதியாக அரசு குளிர்சாதன வசதி கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைத்து தந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறினர்.

Trending News

Latest News

You May Like