1. Home
  2. தமிழ்நாடு

கழிவறை ஆசிட்டை குடிக்கவைத்து மனைவி கொலை.. கணவன் நடத்திய விபரீத விளையாட்டு

கழிவறை ஆசிட்டை குடிக்கவைத்து மனைவி கொலை.. கணவன் நடத்திய விபரீத விளையாட்டு


கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை மனைவியை குடிக்க செய்து கொலை செய்த கொடூர கணவர் குறித்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராஜ்பேட் தண்டா பகுதியில் தருண் (34) - கல்யாணி (30) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. திருமணம் முடிந்த சில காலத்துக்கு பிறகு, தொடர்ச்சியாக இவர்களுக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதாவது, கல்யாணியிடம் அதிக வரதட்சணை கேட்டு தருணும், அவரது குடும்பத்தினரும் அவரை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, மூன்று மாதங்களுக்கு முன்பு கல்யாணி கர்ப்பம் தரித்திருக்கிறார். இருந்தபோதிலும், அவரிடம் வரதட்சணை கேட்டு கணவர் தருண் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

கழிவறை ஆசிட்டை குடிக்கவைத்து மனைவி கொலை.. கணவன் நடத்திய விபரீத விளையாட்டு

அப்போது கல்யாணியை சரமாரியாக தாக்கிய கணவர் தருண், கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடிக்குமாறு அவரை நிர்பந்தப்படுத்தியுள்ளார். முதலில் மறுத்த கல்யாணி, பின்னர் கொடுமை தாங்க முடியாமல் அந்த ஆசிட்டை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் வலியால் அவர் அலறித் துடிக்க தொடங்கியதும் அங்கிருந்து கணவர் தருண் தப்பியோடினார்.

இந்நிலையில், கல்யாணியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக கல்யாணியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தருணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like