1. Home
  2. தமிழ்நாடு

வண்டலூர் பூங்காவில் பரபரப்பு.. பராமரிப்பாளரை தாக்கியது வெள்ளைப் புலி..!

வண்டலூர் பூங்காவில் பரபரப்பு.. பராமரிப்பாளரை தாக்கியது வெள்ளைப் புலி..!


வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் தனித்தனி பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு விலங்கும் பராமரிக்கப்பட்டு வருகிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது அரிய வகையைச் சேர்ந்த சுமார் 6 வெள்ளைப் புலிகள் வசித்து வருகிறது. இதில், நகுலன் என்ற வெள்ளைப் புலி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக உணவு உண்ணாமல் இருந்துள்ளது.

இதனையடுத்து அதன் பராமரிப்பாளர், நகுலனுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவ குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார். மருத்துவக் குழுவினர், பராமரிப்பாளர் உதவியுடன் வெள்ளைப் புலியை கூண்டில் வைத்து பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது வெள்ளைப் புலியின் மாதிரியை சேகரிக்க முயன்றபோது, கூண்டின் தாழ்ப்பாள் சரிவர அடைக்கப்படாததால் புலி வெளியேறி பராமரிப்பாளரை தாக்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட பூங்கா ஊழியர்கள் கூண்டை சரியாக பூட்டினர்.

புலி தாக்கியதால் நிலை குலைந்து தடுமாறி கீழே விழுந்த பராமரிப்பாளரை உடனடியாக மீட்ட பூங்கா ஊழியர்கள், அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பராமரிப்பாளர் தற்போது வீடு திரும்பியதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப் புலிக்கு சிகிச்சை அளிக்க முயன்றபோது பராமரிப்பாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like