1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இருந்து செல்லும் ரயில்களின் சேவையும் பாதிப்பு !!

சென்னையில் இருந்து செல்லும் ரயில்களின் சேவையும் பாதிப்பு !!


மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதன் காரணமாக, வட இந்தியாவில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறி ரயில்கள் தீக்கு இரையாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் பல்வேறு ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் இந்த போராட்டம் தென்னிந்தியாவுக்கும் பரவியதை அடுத்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து செல்லும் ரயில்களின் சேவையும் பாதிப்பு !!

இதற்கிடையே நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தினால் 300 ரயில் சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. மேலும் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 13 ரயில் சேவைகள் இடையே நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகார், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் எதிரொலியாக, சென்னையில் இருந்து பீகார், உ.பி., ஹைதராபாத் செல்லும் அனைத்து ரயில்களுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால், இந்த வழித்தடங்களில் செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணிகள் மற்றும் பதிவு செய்யாமல் பயணத்துக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் சென்னையில் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் ஏராளமான வெளிமாநில பயணிகள் காத்துகிடக்கின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதால் அங்கு கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

newstm.in

Trending News

Latest News

You May Like