1. Home
  2. தமிழ்நாடு

ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணி.. சிஎஸ்கே சாதனை !!

ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணி.. சிஎஸ்கே சாதனை !!


ஐபிஎல் 15ஆவது சீசன் 46ஆவது லீக் போட்டியில் நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய சிஎஸ்கேவில் ஓபனர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 99 (57), டிவோன் கான்வே 85 (55) இருவரும் சிறப்பாக விளையாடியதால், அந்த அணி 20 ஓவர்களில் 202/2 ரன்களை குவித்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மா 39 (24), கேன் வில்லியம்சன் 47 (37), நிகோலஸ் பூரன் 64 (33) போன்றவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். மற்றவர்கள் சொதப்பியதால் அந்த அணி 20 ஓவர்களில் 189/6 ரன்களை சேர்த்து, 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணி.. சிஎஸ்கே சாதனை !!

சிஎஸ்கே இப்படி குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதற்கு காரணம் சிஎஸ்கே பில்டிங் மோசமாக இருந்ததும் ஒரு காரணம். இல்லையெனில் அபிஷேக் ஷர்மா, வில்லியம்சன் உள்ளிட்டோர் விரைவாகவே அவுட்டாகி வெளியேறியிருப்பர். அபிஷேக் அடித்த சுலபமான கேட்சை முகேஷ் சௌத்ரி தவறவிட்டார். அடுத்து மதீஷ் தீக்ஷனா, டுவைன் பிரடோரியஸும் கடைசி கடத்தில் நிகோலஸ் பூரனின் கேட்சை தவறவிட்டனர். இதனால், சிஎஸ்கே வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலைக்கு சென்று, இறுதியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டி முடிந்தப் பிறகு நடைபெற்ற அணி மீட்டிங்கில், தோனி இதுகுறித்து பேசியிருக்கிறார். அப்போது, பிடிக்க வேண்டிய கேட்சை தவறவிட்டால், அதனை எப்படி ஏற்றுக்கொள்வது. மன்னிப்பே கிடையாது. இப்போட்டியில் கேட்சை தவறவிட்ட மூன்று பேருக்கு மன்னிப்பே கிடையாது. அவர்களது ஓய்வு நேரத்தில் ஒரு மணி நேரம் ரத்து செய்யப்படுகிறது. தொடர்ந்து 150 கேட்ச்கள்வரை பிடித்தே ஆக வேண்டும். ஒருவேளே 100 கேட்ச்களை பிடித்து, அதன்பிறகு ஒரு கேட்சை தவறவிட்டாலும், மீண்டும் முதலில் இருந்து 150 கேட்சை பிடிக்க வேண்டும், என அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணி.. சிஎஸ்கே சாதனை !!

மேலும் கேட்ச தவறவிட்டதில் ஒரு சாதனையையும் சென்னை அணி படைத்துள்ளது. நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 19 கேட்ச்களை கோட்டிவிட்டு முதலிடத்தில் உள்ளது. அடுத்து டெல்லி மற்றும் குஜராத் அணிகள் தலா 15 கேட்ச்களை விட்டு அடுத்த இடத்தில் உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இப்போட்டி நாளை மறுநாள் இரவு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

Trending News

Latest News

You May Like