1. Home
  2. தமிழ்நாடு

கற்பழிப்பு புகார் கொடுக்க வந்த இடத்தில் கொடூரம்.. சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்..!

கற்பழிப்பு புகார் கொடுக்க வந்த இடத்தில் கொடூரம்.. சிறுமியை பலாத்காரம் செய்த போலீஸ்..!


உத்தரபிரதேசத்தில், 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு 4 பேரால் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டு 3 நாட்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக அவருடைய தாய், சிறுமியுடன் பாலி போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமியை தனியே விசாரிக்க அழைத்துச் சென்ற போலீஸ் அதிகாரி அந்த சிறுமியை கற்பழித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவருக்கு தெரியவர அவர், மாவட்ட எஸ்பியிடம் நேரடியாக முறையிட்ட பிறகுதான் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேர் கும்பலை தேடி வந்தனர். அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரியும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அந்த போலீஸ் அதிகாரியையும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமி குழு பலாத்காரத்தில் சிதைக்கப்பட்டதுடன், புகார் கொடுக்க வந்த இடத்தில் போலீஸ் அதிகாரியாலும் கற்பழிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like