ஒரு டாக்டர் செய்யுற வேலையா இது..!! காரில் நாயை கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்..!!
வீட்டின் அருகில் வசித்த தெரு நாயை அப்புறப்படுத்துவதற்காக அதன் கழுத்தில் கயிறு கட்டி தனது காரில் இழுத்துச் சென்ற மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஜ்னீஷ் கால்வா. மருத்துவரான இவர், தனது வீட்டின் அருகில் வசித்த நாயை அப்புறப்படுத்துவதற்காக அதன் கழுத்தில் கயிறு கட்டி, அந்த கயிறை தனது காரில் கட்டி சாலை வழியே நாயை இழுத்து சென்றுள்ளார்.
இதை பைக்கில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் அந்த காரை மறித்து, நிறுத்தி நாயை அவிழ்த்து விட்டுள்ளனர். இதன்பின்பு காயமடைந்து இருந்த நாயை ஆம்புலன்ஸ் ஒன்றில் சிகிச்சை அளிக்க கொண்டு சென்று உள்ளனர்.
இந்நிலையில் மருத்துவர் ரஜ்னீஷ் கால்வா, போலீசை உடனடியாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், தனது வீட்டின் அருகே தெரு நாய் வசித்து வந்தது. அதை அப்புறப்படுத்த முயற்சித்தேன் எனக் கூறியுள்ளார்.
எனினும், அந்த நகரின் நாய் இல்லத்திற்கான தொண்டு அமைப்பு ஒன்று விலங்கு வதை சட்டத்தின் கீழ் மருத்துவர் ரஜ்னீஷ் கால்வா மீது வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.