1. Home
  2. தமிழ்நாடு

தேர் எரிகிறது, குப்பை கிடங்கு எரிகிறது.. மின் விளக்கு மட்டும் எரிவதில்லை: முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை..!

தேர் எரிகிறது, குப்பை கிடங்கு எரிகிறது.. மின் விளக்கு மட்டும் எரிவதில்லை: முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை..!


“திமுக ஆட்சியில் தேர் எரிகிறது, குப்பை கிடங்கு எரிகிறது, மருத்துவ கூடமும் எரிகிறது. ஆனால், எரிய வேண்டிய மின் விளக்குகள் மட்டும் எங்கும் எரிவதேயில்லை” என, அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை கூறினார்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தினர் ஏற்பாட்டில் களியக்காவிளை பேருந்து நிலைய திடலில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும், ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

“இந்துக்களுக்கு எப்படி தீபாவளி பண்டிகையோ கிறிஸ்தவர்களுக்கு எப்படி கிறிஸ்துமஸ் பண்டிகையோ இஸ்லாமியர்களுக்கு எப்படி ரம்ஜான் பண்டிகையோ அதுபோல உலகமெங்கும் உள்ள தொழிலாளர்களுக்கு மே தினம் பண்டிகையாக திகழ்கிறது. இதனை கொண்டாடுவதற்கு அதிமுகவிற்கு மட்டுமே அருகதை உண்டு.

திமுக அரசு பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளது. தாலிக்கு தங்கம் திட்டம் ரத்தாகிவிட்டது. மாணவர்களின் மடிக்கணினி திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியாகி விட்டது. இலவச ஸ்கூட்டி திட்டம் தற்போது இல்லை.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை இதுவரை வழங்கப்படவில்லை. சிலிண்டருக்கு மானியம் தரப்படவில்லை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விரைவில் வீட்டிற்கு செல்லும்.

இவர்கள் ஆட்சியில் தேர் எரிகிறது, குப்பை கிடங்கு எரிகிறது, மருத்துவ கூடமும் எரிகிறது. ஆனால், எரிய வேண்டிய மின் விளக்குகள் மட்டும் எங்கும் எரிவதே இல்லை.

காரணம், மாநிலமெங்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டு. திமுக அரசின் கூடவே பிறந்த உடன்பிறப்பு மின்வெட்டு. திமுக ஆட்சி வந்தால் கூடவே மின்வெட்டும் வந்துவிடும்” என்று அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like