1. Home
  2. தமிழ்நாடு

மின்கம்பம் மீது மோதி தீப்பிடித்து எரிந்த கார்.. உடல்கருகி ஒருவர் பலி !

மின்கம்பம் மீது மோதி தீப்பிடித்து எரிந்த கார்.. உடல்கருகி ஒருவர் பலி !


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வாகரை பகுதியில் மரிச்சிலம்பு சாலையில் தினந்தோறும் அதிகளவு வாகனங்கள் சென்றுவருகின்றன. அந்த வகையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வாகரையில் உள்ள மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. சத்தம் அதிகமாக கேட்டதால் அக்கம்பக்கத்து தோட்டங்களில் பணிபுரிந்து வந்த விவசாயிகள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர்.

இதற்கிடையே பயங்கரமாக மோதியதில் கார் மீது மின்கம்பம் விழுந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கார் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து பழனி தீயணைப்பு நிலையம், கள்ளிமந்தையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மின்கம்பம் மீது மோதி தீப்பிடித்து எரிந்த கார்.. உடல்கருகி ஒருவர் பலி !

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டடனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்து காரில் ஆய்வுசெய்தப்போது, காரின் ஓட்டுநர் இருக்கையிலேயே உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

காரை ஓட்டி வந்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், காரில் வந்தது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காந்திபுரத்தை சேர்ந்த சுரேஷ்பாபு (45) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like