1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர்! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!!

சூப்பர்! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!!


ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இம்மாதம் 7ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்பட இருக்கிறது.

அனைத்து ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குமாறு அனைத்து மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு, ரயில்வே துறை சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ஏப்ரல் மாத இறுதியில் அனைத்து ரயில்வே பணியாளர்களுக்கும், உயர்த்தப்பட்ட அகவிலைப்படி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறையைச் சார்ந்த 14 லட்சம் ஊழியர்கள் இதன் மூலம் பலன் அடைய உள்ளனர்.

சூப்பர்! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!!

முன்னதாக, 7ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்திக் கொள்ள மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அந்த நடவடிக்கையின் மூலமாக 50 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்கள் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வூதியதாரர்களுக்குமான அகநிவாரண படியை உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, ஓய்வூதியம் பெற்று வரும் 65 லட்சம் பேர் இதன் மூலமாக பலன் அடைய உள்ளனர். இதற்கிடையே, கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தும் நடவடிக்கையை, மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

சூப்பர்! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!!

அங்கு இதற்கு முன்பு 24.50 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை 27.25 சதவீதமாக உயர்த்தி வழங்குவதற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்தது.

newstm.in

Trending News

Latest News

You May Like