1. Home
  2. தமிழ்நாடு

ஹிஜாப் அணிந்து வர தடை.. தேர்வை புறக்கணித்த மாணவிகள்..!

ஹிஜாப் அணிந்து வர தடை.. தேர்வை புறக்கணித்த மாணவிகள்..!


கர்நாடகாவில் இன்று பியூசி 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியது. இதற்காக, மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ - மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் பள்ளி - கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவை ஐகோர்ட் உறுதி செய்தது.

அதனால், மாணவ - மாணவிகள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உடுப்பி கல்லூரியில் 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். அப்போது, ஹிஜாப்பை நீக்கிவிட்டு சீருடையுடன் தேர்வு எழுத வருமாறு ஆசிரியர்கள் கூறினர். இதனை ஏற்க மறுத்த அந்த மாணவிகள் தேர்வை புறக்கணித்து வீடு திரும்பினர்.

Trending News

Latest News

You May Like