1. Home
  2. தமிழ்நாடு

பெண்களை வெறித்துப் பார்த்தால் இனி சிறை தான் !

பெண்களை வெறித்துப் பார்த்தால் இனி சிறை தான் !


ஒரு ஆண் ஒரு பெண்ணை தொடர்ந்து 14 விநாடிகளுக்கு மேல் சைட் அடித்தால் வழக்கு தொடர சட்டத்தில் இடமுள்ளது என்ற தகவல் இப்போது வெளிவந்து இளைஞர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் பெண்களை வெறித்துப் பார்ப்பது குறித்து டாக்டர் ராஸ் ஹோலெட் தலைமையில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆராய்ச்சிகள் ஆண்களோ, பெண்களோ தங்களின் எதிர்பாலினத்தவரை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பது பற்றியதாகும்.

இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி, அதிகப்படியாக சைட் அடிப்பது என்பது பெண்கள் பாலியல் சீண்டலை பொறுத்துக் கொள்கிறார்கள் அல்லது வரவேற்கிறார்கள் என்ற தவறான எண்ணத்தை ஆணுக்கு தூண்டும் எனக் கூறப்படுகிறது.

பெண்களை வெறித்துப் பார்த்தால் இனி சிறை தான் !

ஆய்வுக்குழுவுக்கு தலைமை வகித்த டாக்டர் ஹாலட் கூறுகையில், ஒருநபரின் முகத்தைப் பார்க்காமல் அவரின் அங்கங்களில் கண்களை மேயவிட்டுப் பார்ப்பது என்பது அந்த நபரை ஒரு போகப் பொருளாக பார்ப்பதற்கு சமம். இவ்வாறாக ஒரு ஆண் பெண்ணையோ அல்லது ஒரு பெண் ஆணையோ போகப் பொருளாகப் பார்க்கும்போது அவர்களின் மனம் குரூர சிந்தனைகளை உருவாக்கிக் கொள்கிறது, என்றார்.

இதற்காக ஆண், பெண் உள்பட 167 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் ரேண்டமாக 1000க்கும் மேற்பட்ட ஆண், பெண்ணிடம் தங்களின் சைட் அடிக்கும் பழக்கம் பற்றியும் கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பெரும்பாலான ஆண்கள் ஆம் என்று சொன்னதோடு மிகக் குறைவான பெண்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

சில ஆண்கள், நான் அழகான பெண்களைப் பார்க்கும் போது எந்த இடத்தில், சூழலில் இருக்கிறேன் என்பதையெல்லாம் மறந்துவிட்டு அவர்களைக் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

பெண்களை வெறித்துப் பார்த்தால் இனி சிறை தான் !

ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும்போது அவர்களுடைய அங்கங்களை எப்படி நோட்டம் விடுகிறான் என்பதை அவனது கண் போகும் போக்கைக் கொண்டு அறிதல். இதன்படி பார்க்கையில் பெரும்பாலான ஆண்கள் பெண்களின் அங்கங்களை நோட்டம்விடுவதில் ஆசை கொண்டவர்களாகவே இருந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் பெண்களைப் பொருத்தவரையில் இது சற்று குறைவாக இருந்துள்ளது. ஆண்களின் முக அழகை கவனிக்கும் பெண்கள் அவர்களின் அங்கங்களுக்கு கண் பார்வையை செலுத்துவதில்லை என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பெண்களை அதிகமாக வெறித்து வெறித்து பார்க்கும் ஆண்கள், அதை அவர்கள் ரசிக்கிறார்கள் என தவறுதலாகப் புரிந்து கொள்கின்றனர். சிலர் எல்லை மீறி சைட் அடித்து பெர்வர்ட் என்ற நிலைக்கு ஆளாகி பாலியல் குற்றங்களை நிகழ்த்துபவர்களாக ஆகிவிடுகின்றனர் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like