1. Home
  2. தமிழ்நாடு

கல்லூரிகளில் ஷிஃப்ட் முறை.. அமைச்சர் பொன்முடி தகவல்..!

கல்லூரிகளில் ஷிஃப்ட் முறை.. அமைச்சர் பொன்முடி தகவல்..!


தமிழக சட்டப்பேரவையில் நேற்று (22-ம் தேதி) கேள்வி நேரத்தின் போது, பொள்ளாச்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பது தொடர்பாக அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பிரதான கேள்வியை எழுப்பினார். இதைத் தொடா்ந்து உறுப்பினர்கள் சிலர் துணைக் கேள்விகளை கேட்டனர்.

இதற்கு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அளித்த பதில்: “வேலைவாய்ப்புகள் அதிகமாக இருந்தால்தான் பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்பக் கல்லூரிகளில் சோ்க்கை அதிகம் இருக்கும்.

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1.10 லட்சம் சோ்க்கை இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப, ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களின் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 10 கல்லூரிகளைத் தொடங்குவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதேசமயம், இப்போதுள்ள கல்லூரிகளில் ஆண்கள் காலையிலும், பெண்கள் மாலையிலும் வந்து பயிலும் வகையிலான ஷிஃப்ட் முறையை கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like