1. Home
  2. தமிழ்நாடு

காக்கி உடையில் பாலியல் சேட்டை.. கம்பி எண்ணும் போலி போலீஸ் !!

காக்கி உடையில் பாலியல் சேட்டை.. கம்பி எண்ணும் போலி போலீஸ் !!


சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் சதிஷ் (35). இவர் அதிமுக மாணவரனி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி தனது நண்பர்களான அபிஷேக் ஜேக்கப் மற்றும் யாசின் ராஜா ஆகியோருடன் சேர்ந்து சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது நண்பரின் குழந்தையை பார்க்க சென்றுள்ளார். காரில் சதீஷ் தனது வேலை சம்மந்தமாக 13 லட்சம் பணம் வைத்துவிட்டு நாளை பெற்றுக்கொள்வதாக கூறி வளசரவாக்கத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அபிசேக் ஜேக்கப் மற்றும் யாசின் ராஜா ஆகியோர் மருத்துவமனை கார் பார்க்கிங்கில் இருந்த தங்களது காரை எடுக்க வந்த போது, காரினுள் இருந்த 13 லட்சம் பணம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அபிஷெக் ஜேக்கப் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காக்கி பேண்ட் கையில் வாக்கிடாக்கியுடன் வந்த நபர் ஒருவர் காரை திறந்து 13 லட்சம் திருடியது தெரியவந்தது.

உடனே சேத்துப்பட்டு போலீசார் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜமாலுதீன்(41) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜமாலுதீனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
காக்கி உடையில் பாலியல் சேட்டை.. கம்பி எண்ணும் போலி போலீஸ் !!
கடந்த 11ஆம் தேதி ஹாரிங்டன் சாலையில் தனது காதலருடன் காரில் இருந்த இளம்பெண்ணை போலீஸ் எனக்கூறி ஜமாலுதீன் மிரட்டி, இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து 1000ரூபாய் மிரட்டி சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜமாலுதீன் நல்ல உயரம் கொண்ட நபர் என்பதால் காக்கி பேண்ட் கையில் வாக்கிடாக்கியுடன் காதலர்கள் இருக்கும் இடமான பெசன்ட் நகர் கடற்கரை, மெரினா கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று, காதலர்களிடம் போலீஸ் என கூறி காதலர்களை மிரட்டுகிறார்.
பின்னர் காதலர்களின் வீட்டில் தகவல் சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என காதலர்களை மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபடுவதை ஜமாலுதீன் வாடிக்கையாக செய்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை முழுவதும் போலீஸ் எனக்கூறி பணப்பறிப்பில் ஈடுபட்டதாக 25 வழக்குகள் ஜமாலுதீன் மீது இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜமாலுதீனிடமிருந்து திருடிய பணமான 13லட்ச ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட ஜமாலுதீனை விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in

Trending News

Latest News

You May Like