#BIG NEWS:- பரபரப்பு தகவல்.. ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கம்..?
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11-ம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்துவிட்டு டெல்லி சென்ற ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு விட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “நேற்று வரை மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், வைத்திலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகவும் இருந்தனர்” என்று குறிப்பிட்டார்.
இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும், வைத்திலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.