1. Home
  2. தமிழ்நாடு

முட்டுக்கட்டை போட்டவர் உயிரிழப்பு.. குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்..!

முட்டுக்கட்டை போட்டவர் உயிரிழப்பு.. குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்..!


நாகப்பட்டினம் மாவட்டம், திருச்செங்காட்டாங்குடி சப்பரத் திருவிழாவில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நாகப்பட்டினம் மாவட்டம், திருச்செங்காட்டங்குடியில் இன்று (30.4.2022) அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது அதிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் தீபன்ராஜ் மீது சப்பரம் ஏறியதால் பலத்த காயமடைந்துள்ளார். அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனக் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like