1. Home
  2. தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ரூ.2.23 கோடி.. பக்தர்கள் வழங்கினர்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ரூ.2.23 கோடி.. பக்தர்கள் வழங்கினர்..!


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதத்திற்கு இரண்டு முறை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த மாதத்தில் முதல் முறையாக கடந்த 8-ம் தேதி எண்ணப்பட்டது. இதில், ரூ.1 கோடியே 47 லட்சத்து 90 ஆயிரத்து 943 கிடைத்தது.

2-வது முறையாக நேற்று முன் தினம் (28-ம் தேதி, கோவில் இணை ஆணையர்(பொறுப்பு) குமரதுரை தலைமையில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.

நேற்று (29-ம் தேதி) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், இதன் உப கோவில்களான திருச்செந்தூர் சிவன் கோவில், நாசரேத் கோவில், கிருஷ்ணாபுரம் கோவில், குலசேகரன்பட்டினம் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள உண்டியல்கள் எண்ணப்பட்டன.

இதில் ரூ.85 லட்சத்து 41 ஆயிரத்து 896 கிடைத்துள்ளது. ஆக மொத்தத்தில், இந்த மாதம் மட்டும் ரூ. 2 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 839 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

அத்துடன், இந்த மாதம் மொத்தத்தில் தங்கம் 1,925 கிராமும், வெள்ளி 51 ஆயிரத்து 65 கிராமும், 62 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like