1. Home
  2. தமிழ்நாடு

ரயில் - நடைமேடைக்கு இடையே விழுந்த நபரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே பெண் போலீஸ்..!!

ரயில் - நடைமேடைக்கு இடையே விழுந்த நபரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே பெண் போலீஸ்..!!


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் நிலைதடுமாறி இடையே விழுந்த பயணி ஒருவரை அங்கிருந்த ரயில்வே பெண் போலீஸ் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக நேற்று இரவு 11.30 மணியளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி செல்லக்கூடிய ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அப்போது அந்த ரயில் கிளம்பிய போது ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் ஒருவர் நிலைதடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிக்கினார்.

அப்போது அங்கு பணியிலிருந்த ரயில்வே பெண் போலீசார் மாதுரி, சுதாரித்துக் கொண்டு துணிச்சலாக சிக்கிய நபரை ஒற்றைக் கையால் இழுத்து அவரை காப்பாற்றினார். ரயில்வே பெண் போலீசாரின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு ரயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like