1. Home
  2. தமிழ்நாடு

நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்.. இலவச பயிற்சி அளிக்கும் அரசு !!

நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்.. இலவச பயிற்சி அளிக்கும் அரசு !!


கரூர் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பண்டுதகாரன்புதூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அருணாச்சலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கரூர் மாவட்டம், மண்மங்கலம் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய ஒரு நாள் இலவசப்பயிற்சி வரும் 27ஆம் தேதி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் நாட்டுக்கோழி இனங்கள், புறக்கடை மற்றும் கூண்டுமுறை வளர்ப்பு முறைகள், கொட்டகை அமைப்பு, தீவனம் மற்றும் குடிநீர் பராமரிப்பு, நாட்டுக்கோழிகளை தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்.. இலவச பயிற்சி அளிக்கும் அரசு !!

மேலும், கோழிக்குஞ்சு பொரிக்கும் சாதனம் உபயோகம் மற்றும் பராமரிப்பு, மூலிகை மருத்துவமுறைகள், குடற்புழு நீக்கம், தடுப்பூசி அளித்தல், விற்பனை உத்திகள் மற்றும் பண்ணைப் பொருளாதாரம் ஆகிய தலைப்புகள் குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.

பயிற்சியில் கலந்துக்கொள்ள விரும்புவோர் நேரடியாக வரும் 27ம்தேதி காலை 10.30 மணிக்குள் வந்து பயிற்சியில் பங்குகொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு பயிற்சி மைய போன் எண். 04324 294335 செல்போன் எண் மற்றும் வாட்ஸ்அப் எண் -73390 57073 மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம், என கூறப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like