1. Home
  2. தமிழ்நாடு

நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு.. திடீர் சாலை மறியல்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு..!

நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு.. திடீர் சாலை மறியல்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு..!


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு கால்நடை மருத்துவமனையில், 19 கால்நடை மருத்துவர் உதவியாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஏப்ரல் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரத்து 100 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதையடுத்து, 26 மற்றும் 27-ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற்ற நிலையில், இன்று தற்காலிகமாக நேர்முகத் தேர்வு நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள இன்று காலை முதலே வந்து காத்திருந்தனர்.

இந்நிலையில், திடீரென நேர்முக தேர்வு நிறுத்தப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர்கள், திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

Trending News

Latest News

You May Like