1. Home
  2. தமிழ்நாடு

வெயில், மழை பாராமல் தொடரும் மக்கள் போராட்டம்!!

வெயில், மழை பாராமல் தொடரும் மக்கள் போராட்டம்!!


இலங்கையில் அதிபருக்கு எதிராக, காலிமுகத்திடலில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மூன்றாவது நாள் இரவிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நாடு முழுவதும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொழும்பு காலிமுகத்திடலில் அதிபர் செயலகம் முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

கோட்டாபய ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பும் வரை தங்களது போராட்டம் தொடரும் என ஒன்று கூடிய மக்கள், வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர்.

வெயில், மழை பாராமல் தொடரும் மக்கள் போராட்டம்!!

போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு, சமூக ஆர்வலர்கள் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினர். மூன்றாவது நாள் இரவிலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் நடத்தினர்.

அதிபருக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருமணம் முடிந்த கையுடன் மணக்கோலத்தில் புதுமண தம்பதி போராட்டக் களத்தில் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

வெயில், மழை பாராமல் தொடரும் மக்கள் போராட்டம்!!

மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தாலும் இலங்கை அரசு அதுகுறித்து பெரிதாக கண்டு கொள்வதாக தெரியவில்லை. ஆட்சியில் இருந்து கீழே இறங்க மாட்டோம் என்று ராஜபக்ச குடும்பத்தினர் இருப்பதாகவே தெரிகிறது. இதனால் இலங்கை மக்கள் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like