1. Home
  2. தமிழ்நாடு

மக்களே கவனம்.. 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

மக்களே கவனம்.. 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!


இந்தியாவில், நடப்பு ஆண்டில் கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் வட மாநிலங்கள் சிலவற்றுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஆர்.கே. ஜெனாமணி கூறும்போது, “இந்தியாவில் இன்று (29-ம் தேதி), நாளை (30-ம் தேதி) மற்றும் மே 1 ஆகிய 3 நாட்கள் மேற்கு ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மேற்கு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வெப்பம் அதிக அளவில் இருக்கும்.
ANI on Twitter:
அதாவது, 36 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு இருக்கும். இந்த வெப்ப அலையை முன்னிட்டு இந்த 7 மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்படுகிறது.

இதன்பின்னர் மே 2-ம் தேதி முதல் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, வருகிற 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like