1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!! பார்சல் புக்கிங் சேவை கட்டணம் அதிரடி உயர்வு..

மக்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!! பார்சல் புக்கிங் சேவை கட்டணம் அதிரடி உயர்வு..


தமிழகத்தில் மொத்தம் உள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் 50 சதவீத லாரிகள் இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கு முக்கிய காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு..

தற்போது பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து ரூ.110-ஐ கடந்துவிட்டது. இதனால் காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், சேலத்தில் பார்சல் புக்கிங் கட்டணத்தை அதன் நிறுவனங்கள் 12 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு 10 கிலோ பார்சலுக்கு ரூ.150 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.170 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சேலம்-நெல்லை இடையேயான கட்டணம் கிலோவுக்கு ரூ.160-ல் இருந்து 180 ஆகவும், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கட்டணம் ரூ.240-ல் இருந்து ரூ.280 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு தேவைகளுக்காக பார்சல் அனுப்பும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like