1. Home
  2. தமிழ்நாடு

மதுரையில் மோதலில் ஈடுபட்ட மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத அதிகாரிகள் நிபந்தனை !

மதுரையில் மோதலில் ஈடுபட்ட மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத அதிகாரிகள் நிபந்தனை !


மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத அதிகாரிகள் பெரும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கடந்த 30ஆம் தேதி அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவிகள், பொதுமக்கள் என பலரும் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது பள்ளி மாணவிகள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரையில் மோதலில் ஈடுபட்ட மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத அதிகாரிகள் நிபந்தனை !

இந்த நிலையில் நேற்று காவல் அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மோதலில் ஈடுபட்ட மாணவிகளையும் அவர்களின் பெற்றோர்களையும் பள்ளிக்கு அழைத்திருந்தனர். அப்போது, மோதலில் தொடர்புடைய மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முன்னிலையில் பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு தலைமையிலான குழுவும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியது. பின்னர் மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. மாணவிகளின் பெற்றோர்களும் விசாரிக்கப்பட்டனர். மேலும் மாணவிகள் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

மதுரையில் மோதலில் ஈடுபட்ட மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத அதிகாரிகள் நிபந்தனை !

மேலும் சண்டை போட்டுக்கொண்ட மாணவிகளுக்கு பொதுதேர்வு எழுத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது அரசு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் அதுவரை சம்பந்தப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், தேர்வுக்கு பெற்றோருடன் வர வேண்டும், என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like