1. Home
  2. தமிழ்நாடு

அக்னிபத் திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு மேலும் சலுகை.. அமித் ஷா அறிவிப்பு !!

அக்னிபத் திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு மேலும் சலுகை.. அமித் ஷா அறிவிப்பு !!

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீகாரில் சாலை மறியலாக தொடங்கிய போராட்டம் இப்போது பல மாநிலங்களில் பெரும் வன்முறையாக மாறியுள்ளது.

பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரயில்களை தீயிட்டு கொளுத்தினர். இன்று 4ஆவது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இதுவரை 12 ரயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு மேலும் சலுகை.. அமித் ஷா அறிவிப்பு !!

இந்நிலையில் அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய துணை ராணுவ படைகள் மற்றும் அசாம் ரைபிள்களில் ஆட்சேர்ப்புக்காக அக்னிவீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அக்னிபத் திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு மேலும் சலுகை.. அமித் ஷா அறிவிப்பு !!

மேலும், அக்னிவீரர்களின் முதல் பேட்சுக்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.



newstm.in

Trending News

Latest News

You May Like