1. Home
  2. தமிழ்நாடு

வரும் 19-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு..!

வரும் 19-ம் தேதி உள்ளூர் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு..!


பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.

அன்று காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதையொட்டி வரும் 19ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

ஆயினும், தேர்வுகள் நடைபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, வரும் 30-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like