1. Home
  2. தமிழ்நாடு

உயிரே போனாலும் பரவாயில்லை.. பல்லக்கை சுமப்பேன்.. மதுரை ஆதீனம் அதிரடி..!

உயிரே போனாலும் பரவாயில்லை.. பல்லக்கை சுமப்பேன்.. மதுரை ஆதீனம் அதிரடி..!


மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறும். இதன்போது, ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து மக்கள் தூக்கிச்சென்று வீதியுலா செல்வது வழக்கம்.

இந்நிலையில், ‘மனிதரை, மனிதர்கள் தூக்கிச் செல்வதை தடை செய்ய வேண்டும்’ என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்த ஆண்டின் பட்டின பிரவேச விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, பட்டின பிரவேசம் விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த தடை குறித்து மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: “500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது.

தருமபுரம் ஆதீன மடத்துக்கு கவர்னர் சென்றதே பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்க காரணம். எனது குருவான தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்.

உயிரே போனாலும் பரவாயில்லை, நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். பட்டின பிரவேசம் நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like