1. Home
  2. தமிழ்நாடு

இதெல்லாம் ஒரு காரணமா? - மகனை குத்திக் கொலை செய்த தந்தை !

இதெல்லாம் ஒரு காரணமா? - மகனை குத்திக் கொலை செய்த தந்தை !


குடும்பத் தகராறு காரணமாக மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரி அரியாங்குப்பம் வீராம்பட்டிணம் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (55) என்பவர், தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். அவரது முதல் மனைவி கடலூரில் வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு மனைவி என்பதால் அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. எனினும் அவர் அதனை சமாளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது இரண்டாவது மனைவியின் மகன் தினேஷ், புதுச்சேரியில் உள்ள வீட்டுக்கு சென்று ஏன் இப்படி அடிக்கடி வீட்டில் சண்டை போடுறீங்க என்று கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தினேஷ் தந்தையின் மார்பில் அடித்துள்ளார்.
இதெல்லாம் ஒரு காரணமா? - மகனை குத்திக் கொலை செய்த தந்தை !
இதனால், ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அருகில் வைத்திருந்த கத்தியை எடுத்து மகன் தினேஷின் கழுத்து மற்றும் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தினேஷ் அங்கேயே உயிரிழந்தார். இதனிடையே, கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தினஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர். தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Trending News

Latest News

You May Like