1. Home
  2. தமிழ்நாடு

திருமலை திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!!

திருமலை திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!!

விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த சாதாரண பயணிகள் ரயில் போக்குவரத்து கொரோனா காரணமாக கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து ரயில் சேவைகளும் தொடங்கி உள்ளதால், விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு பாசஞ்சர் ரயிலுக்கு பதிலாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி நோக்கி புறப்பட்ட விரைவு ரயிலை ரயில் நிலைய அதிகாரிகள் ஜூலை 1ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் தினசரி மாலை 5.20 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில் இரவு 11 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது. அதேப்போல் அதிகாலை 2.35 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் விரைவு ரயில் காலை 10.30 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது. இதையடுத்து 9 பெட்டிகளுடன் புறப்பட்ட விரைவு ரயிலில் ஏராளமான பொதுமக்கள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.

Trending News

Latest News

You May Like