கொடூரம்! பசு மாட்டை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!!
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக மாட்டின் சத்தம் கேட்கவே, பக்கத்து வீட்டில் உள்ள நபர் மாட்டினை சென்று பார்த்துள்ளார். அப்போது, பசுமாட்டுடன் ஒருவர் உடறவு கொள்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, அவர் கூச்சலிடவே, அங்கிருந்து அந்த நபர் தப்பிச் சென்றார். தொடர்ந்து, தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது அந்த நபர் பக்கத்து வீட்டுக்காரர் தான் என்பது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மாட்டின் உரிமையாளரிடம் நடந்த சம்பவத்தை அவர் ஆதாரத்துடன் எடுத்து கூறினார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து மாட்டின் உரிமையாளர் ஜிதேந்திர யாதவ், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள், குற்றம்சாட்டப்பட்ட நபரை தேடி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். முன்னதாக, கேரளாவில் சினை ஆட்டை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in