1. Home
  2. வர்த்தகம்

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.. வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்..!

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி.. வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ம் தேதி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நடத்த இருந்த வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதுகுறித்து, இந்திய வங்கிகளின் கூட்டமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, மத்திய தொழிலாளர் நல கமிஷனர் மற்றும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு அதிகாரிகளுடன் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பிரநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, கூட்டமைப்புகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை ஜூலை 1-ம் தேதி நடக்கும் எனவும் இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, வரும் 27-ம் தேதி நடைபெற இருந்த வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like