1. Home
  2. தமிழ்நாடு

உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய காதலன் வீட்டின் முன் காதலி தர்ணா போராட்டம்..!!

உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய காதலன் வீட்டின் முன் காதலி தர்ணா போராட்டம்..!!


கேரள மாநிலம் மலப்புரம் மஞ்சேரியை சேர்ந்த ஒரு வாலிபர் கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி படித்து வருகிறார். அதேபோன்று பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் சென்னையில் தங்கி ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 6 மாதத்துக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். அப்போது அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பிய இளம் பெண் கடந்த 6 மாதமாக வாலிபருடன் தனி வீடு எடுத்து வசித்து வந்தார். அப்போது இளம் பெண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் எனது தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து உள்ளார் நான் உடனடியாக கேரளா சென்று தந்தையை சந்தித்து திருமணத்துக்கு அனுமதி வாங்கி வருகிறேன் என்ற தெரிவித்துவிட்டு சென்று உள்ளார்.

வெகு நாட்களாகியும் அந்த வாலிபர் சென்னை திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த இளம் பெண் மஞ்சேரில் உள்ள வாலிபர் வீட்டுக்கு சென்றார். அங்கு வாலிபரை விசாரித்த போது இங்கு யாரும் அப்படி இல்லை என்று அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வாலிபரை சந்திக்கும் வரை அவரின் வீட்டின் வெளியே தங்கி போராட்டம் நடத்தி உள்ளார். தொடர்ந்து 3 நாளாக போராட்டதில் ஈடுபட்ட பெண்ணுக்கு தெரியாமல் வாலிபரின் பெற்றோர்கள் தலைமறைவாகி விட்டனர். அதனால் அதிர்ச்சி அடைந் அந்த பெண் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை அறிந்த அப்பகுதியினர் மஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது நீங்கள் தமிழ்நாட்டுக்கு சென்று புகார் கொடுங்கள் என்று போலீசார் தெரிவித்ததாக கூறுப்படுகின்றது.

அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் வாலிபரை பார்க்காமல் திரும்பமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like