1. Home
  2. தமிழ்நாடு

சிறுமியை திருமணம் செய்து உல்லாசம்.. பெண் கைது !!

சிறுமியை திருமணம் செய்து உல்லாசம்.. பெண் கைது !!


சிறுமியை திருமணம் செய்த ஏற்கனவே திருமணமான பெண் ஒருவர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் உறவினர் சகிதா பேகம் (29). சகிதா பேகம் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் சபிதா.

இந்நிலையில், சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சகிதா பேகம் அவருடன் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டார். பெற்றோர் வீட்டில் இல்லாத போது, தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொட்டு பழகி வந்துள்ளார் சபிதா. அதோடுமட்டுமல்லாமல் சிறுமிக்கு செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்து அதன்மூலம் இருவரும் பேசி வந்துள்ளனர்.

சிறுமியை திருமணம் செய்து உல்லாசம்.. பெண் கைது !!

ஆனால், செல்போன் குறித்து சிறுமியின் பெற்றோர் கேட்டபோது, அவர் சகிதா பேகத்துடன் விபரீதமாக பழகிவந்தது தெரியவந்தது. இதனையடுத்து பெற்றோர் சிறுமியைக் கண்டித்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 6ஆம் தேதி, சகிதா பானு அவரது உறவினர் வகிதா பானு (29) என்பவரின் உதவியோடு, ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து மேலூரில் லாட்ஜ் ஒன்றிற்கு அழைத்துச் சென்று சிறுமியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் இருந்த இடத்தை அறிந்து அங்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டனர்.

சிறுமியை திருமணம் செய்து உல்லாசம்.. பெண் கைது !!

மேலும், சகிதா பேகம், அவரது உறவினரான வகிதா பானு ஆகியோர் மீது‘போக்சோ ’சட்டம் மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

இதனிடையே, சிறுமியிடம் இருந்து நகை சபிதா பேகம் நகை பறித்ததும் தெரியவந்தது. சிறுமியை பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ அவரது செல்போனில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like