பிரபல பாடகர் கார் விபத்தில் பலி!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!
'மை டர்ன்' ஆல்பத்தின் 'தேரே பினா' என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானாவர் நிர்வைர் சிங். இந்த பாடல் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பாஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள குரலி பகுதியைச் சேர்ந்த நிர்வைர் சிங், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா சென்று அங்கு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் டிகர்ஸ் ரெஸ்டின் புறநகர் பகுதியில் மூன்று கார்கள் விபத்துக்குள்ளானது. இந்த கார் விபத்தில் தொடர்பு உடைய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பகுதியில் விபத்து ஏற்பட காரணம் முன்னதாக சென்ற ஒரு கார் தவறாக ஒட்டி செல்லப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் காரை தவறாக ஓட்டிச் சென்ற ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். சிறு காயங்களுடன் இருந்த அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த கார் விபத்தில் பஞ்சாபி பாடகர் நிர்வைர் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மூன்றவதாக வந்த காரில் இருந்த நபர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்த விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்த முழுமையான தகவல் விரைவில் வெளியாகும் என உறுதி அளித்துள்ளனர்
நிர்வைர் சிங் கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 'ஹிக் தோக் கே' என்ற பாடலை பாடகர் குர்லேஜ் அக்தருடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் நண்பரான ககன் கோக்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வைர் சிங்கின் மரண செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.