1. Home
  2. தமிழ்நாடு

பரபரப்பு.. பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்த முதியவர்..!

பரபரப்பு.. பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்த முதியவர்..!


சீனாவின் ஷாங்காய் நகரின் புட்டுவோ மாவட்டத்தில் உள்ள முதியோருக்கான மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த முதியவர் ஒருவர் உயிரிழந்து விட்டார் எனக் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து அவரை பிரேத பரிசோதனை கூடத்துக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அவர் உயிருடன் இருந்துள்ளார். அவரது உடல் பாகங்கள் அசைந்துள்ளன. இதனால், பரிசோதனை கூடத்தில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல் நலம் சீரானது. இதை உள்ளூர் அரசு நிர்வாகம் உறுதி செய்தது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த ஷாங்காய் நகரவாசிகள் ஆத்திரமடைந்து, கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடும் கட்டுப்பாடு உத்தரவுகளால் பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க கூடிய சூழல் காணப்படுகிறது. அத்தியாவசிய மருத்துவ சேவையை கூட பெற முடியவில்லை என மக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதுபற்றி விசாரணை நடத்த அரசு கூட்டு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த சம்பவத்தில், 5 மாவட்ட அதிகாரிகள் மற்றும் முதியோர் மருத்துவமனையின் தலைவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உயிரிழந்து விட்டார் என மருத்துவமனையில் கூறப்பட்ட முதியவர் பிரேத பரிசோதனை கூடத்தில் உயிருடன் எழுந்தது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like