1. Home
  2. தமிழ்நாடு

“திராவிட மாடல் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது” : முதலமைச்சர் அதிரடி!!

“திராவிட மாடல் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது” : முதலமைச்சர் அதிரடி!!


திராவிட மாடல் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது என்று ரிவித்துள்ளார்.

நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னிறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மேற்கொண்ட 21 நாட்கள் பிரச்சாரப் பெரும் பயண நிறைவு விழா பெரியார் திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், முதலமைச்சர் மு..ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய முதல்வர் மு..ஸ்டாலின், பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது புதிதல்ல, என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். 90 வயதுக்கு மேல் தான் பெரியார் அதிகமான கூட்டங்களில் பேசியிருக்கிறார் என்றார்.

“திராவிட மாடல் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது” : முதலமைச்சர் அதிரடி!!

அவரைப்போலவே 89 வயதில் கி.வீரமணி உழைத்துக் கொண்டிருக்கிறார். இன்றைய சூழலில் இன உணர்வோடு இளைஞர்கள் திரள வேண்டும். திராவிட மாடல் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது என்று முதலமைச்சர் கூறினார்.

பெரியார் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுவது சிலருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. திராவிட மாடல் ஆட்சி தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது, திமுகவும் திராவிட கழகமும் ஒட்டியிருப்பது பலருக்கு எரிச்சலை தருகிறது என்று பேசினார்.

கறுப்பும் சிவப்பும் யாராலும் பிரிக்க முடியாது. அனைவரும் படிப்பதற்கு தடை விதிக்க பார்க்கிறார்கள்; அதற்காக கொண்டு வந்தது தான் நீட் தேர்வு தேசிய கல்விக்கொள்கை. ஜெயலலிதா இருந்தவரை நீட் வரவில்லைஇருண்ட ஆட்சி நடத்திய இரட்டையர்கள் தான் கொண்டு வந்தார்கள். என்று விமர்சித்தார்.

“திராவிட மாடல் சிலருக்கு எரிச்சலைத் தருகிறது” : முதலமைச்சர் அதிரடி!!

ஆளுநர் வேலை என்பது மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது அல்ல, குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்பும் தபால்காரர் வேலை தான். நாங்கள் கேட்பது நீட் சட்ட முன்வடிவுக்கான ஒப்புதல் அல்ல, குடியரசு தலைவருக்கு அனுப்பத்தான் சொல்கிறோம் என்றார்.

அஞ்சல்துறை ஊழியரின் பணியைக் கூட செய்யாமல் இருப்பது ஆளுநருக்கு அழகல்ல. மக்களை விட ஆளுநர் அதிகாரம் மிக்கவர் என்ற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like