மகனுக்கு ஜாமீன் வேணுமா..?: அப்ப எனக்கு மசாஜ் செய்.. எஸ்.ஐ போட்ட பலே கண்டிஷன்..!
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனை சிறையில் இருந்து விடுவிக்க ரவுஹட்டா காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சசி பூஷன் சின்ஹா என்பவர் தனக்கு மசாஜ் செய்யும்படி அந்த பெண்ணிடம் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும், மசாஜ் செய்து விட்டால் அவரது மகனை விரைவில் சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதாக சசி பூஷன் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்தப் பெண், சப்-இன்ஸ்பெக்டர் சசி பூஷன் சின்ஹாவுக்கு மசாஜ் செய்து உள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, ரவுஹட்டா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சசிபூஷன் சின்ஹா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வீடியோ, போலீஸ் அவுட் போஸ்டில் உள்ள குடியிருப்புக்குள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.