காவல் நிலையங்களில் இரவு நேரங்களில் விசாரணை நடத்தக்கூடாது - டிஜிபி சைலேந்திரபாபு..!!
சென்னை, திருவண்ணாமலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் உயிரிழந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது. வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களிடம் எனப்படும் இரவு விசாரணை நடத்தக்கூடாது. கைது செய்யப்பட்டவர்களை மாலை 6-மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகளை கண்காணிக்க உளவுப் பிரிவு காவலர்கள் அந்தந்த காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.