கணவனை எதிர்த்து பேசிய மனைவியின் அந்தரங்க உறுப்பபில் பெவிகுவிக் ஊற்றி மனித மிருகமாக நடந்து கொண்ட கொடுமை..!!
மத்திய பிரதேசம் சேர்ந்தவர் சென். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் நடந்தது. மதுபோதைக்கு அடிமையான சென் தினமும் குடித்துவிட்டு மனைவியை சித்ரவதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒரு அளவுக்கு பொறுமையாக இருந்த மனைவி ஒரு கட்டத்தில் அவரை எதிர்த்து பேச ஆரம்பித்தார். தன்னை எதிர்த்து மனைவி பேசுவதா? என்று ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கடுமையாக அடித்து உதைத்திருக்கிறார்.
மேலும் மனைவியை நிர்வாணமாக்கி கை, கால்களை இறுக்கி கட்டிப்போட்டு வீட்டில் இருந்த பெவிக்குவிக்கை எடுத்து வந்து அவரின் அந்தரங்கப் பகுதியில் ஊற்றி கொடூரமாக நடந்துள்ளார். இதில் வலி தாங்கமால் அவரது மனைவி அலறி துடித்துள்ளார். அந்த அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரது கணவரை தேடி வருகின்றனர்.