1. Home
  2. தமிழ்நாடு

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா உறுதி..!

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா உறுதி..!


செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அம்மாபேட்டை அருகே, தனியாருக்கு சொந்தமான சத்யசாய் எனும் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது, 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில் 25 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக, சென்னை ஐஐடியில் 200-க்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like