சர்ச்சை! சட்டப்பேரவையில் ஒருமையில் பேசிய அமைச்சர்!!
சட்டப்பேரவை விவாதத்தின்போது அமைச்சர் பெரியகருப்பணன் ஒருமையில் பேசியதால் அவரை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்ததாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மாநில பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார்.
இதை தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகை பேசும்போது, அதிமுகவின் முன்னாள் முதலமைச்சரின் பெயரை குறிப்பிட்டார். முன்னாள் முதலமைச்சரின் பெயரை கூறக்கூடாது என்பது சட்டப்பேரவை விதி என கூறி அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
செல்வப்பெருந்தகையின் அந்த பேச்சை மட்டும் அவக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். எனினும், அதிமுகவினர் தொடர்ந்து கூச்சலிட்டப்படி இருந்தனர். அதை தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்ட போதுஅமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக உட்காருடா என ஒருமையில் பேசினார். அதனால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
newstm.in